திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடாத விதமாக திடக்கழிவு மேலாண்மையில் இயற்கை உரம் தயாரிப்பு செயல் விளக்கம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் நேரு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் பேரூராட்சி இளநிலை உதவியாளர் புஷ்பலதா, செல்வராஜ் போன்றோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் காந்தி கார்த்திக், முன்னாள் வார்டு  உறுப்பினர்கள் சக்திவேல், திருச்சி அன்பில் தர்மலிங்கம், ராஜன், ரமேஷ் மற்றும் தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள், இயக்கப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதன் முடிவில் திடக்கழிவு மேலாண்மை மேற்பார்வையாளர் அசோகன் நன்றி தெரிவித்துள்ளார்.