வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு திசை நோக்கி வந்த பிறகு தென்மேற்கு திசை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காரைக்காலில் இருந்து 610 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் தென்தமிழகம், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கான ஆரஞ் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.