தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால் நாளை முதல் ரேஷன் அட்டைதாரர்கள் அத்யாவசிய உணவுப் பொருட்களை எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. ரேஷன் பொருட்களை ரேஷன் அட்டையில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் மட்டும் வாங்க முடியும். அதனால் இடம்பெயரும் தொழிலாளர்கள் சிரமப்பட்டதால் எந்த இடத்திலும் உள்ள ரேஷன் கடைகளிலும் பொருள்களை வாங்கும் வசதி தொடங்கப்பட்டது.

ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதால் ரேஷன் அட்டையில் உள்ள முகவரிக்கு ஒதுக்கிய கடைகளில் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்து விட்டதால் நாளை முதல் அடுத்த மாத உணவுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதனை ரேஷன் அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது