கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த கௌரி தனது தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் மாலை கௌரி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதி கௌரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று கௌரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.