ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோலார் கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கள்ள கவுண்டன் பாளையத்தில் முருகன்- அமுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரித்தீஷ்(18), ஜீவா(16) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ரித்தீஷ் 12-ஆம் வகுப்பும், ஜீவா 1௦-ஆம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று ஜீவா மோட்டார் சைக்கிளில் பழனி ரோட்டில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் போக்குவரத்து நகர அருகே சென்ற போது எதிரே வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜீவா லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.