தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன் பெரும் வகையில் வருகின்ற ஜூலை 21 அதாவது நாளை வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் வரை அனைத்து விதமான கல்வித் தகுதி உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.