ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் பகுதியில் 49 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 17 வயதுடைய மகள் உள்ளார். இந்நிலையில் குடிபோதையில் ஹோட்டல் தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் பெருந்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.