தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுபட்டி கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சினேகாவிற்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.