நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கருப்பம்புலம் மேலக்காடு எம்.ஜி.ஆர் நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதுடைய தீபக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு ஐ.டி.ஐயில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் தீபக் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவியிடம் பேசி பழகி வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று தீபக் அந்த மாணவியிடம் பேசிக்கொண்டிருந்தார்.

இதனை பார்த்த மாணவியின் பெற்றோர் தீபக்கை கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த தீபக் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.