ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொல்லைமேடு பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ராதிகா(27) என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராதிகாவுக்கு பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது ராதிகா 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் சர்க்கரை நோயால் அவதிப்பட்ட சுமதி கடந்த 29-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தாய் இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இருந்த ராதிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராதிகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.