சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் பகுதியில் சாலையோரம் சிவகாமி என்பவர் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி வியாபாரம் முடிந்ததும் 2 பெட்டிகளில் இருந்த தக்காளியை சிவகாமி பாதுகாப்பாக சாக்குப்பையால் மூடி வைத்துவிட்டு பால் மார்க்கெட்டுக்கு சென்று தூங்கினார். மறுநாள் அதிகாலை எழுந்தவுடன் சிவகாமி வியாபாரம் செய்யும் இடத்திற்கு வந்துள்ளார்.

அப்போது இரண்டு பெட்டிகளில் வைத்திருந்த 50 கிலோ தக்காளிகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தக்காளியை திருடி சென்ற மரம நபரை தேடி வருகின்றனர்.