ஈரோடு மாவட்டத்திலுள்ள புது அண்ணாமலை பாளையத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சிவசங்கரி திருமணமான இரண்டு வருடத்திலேயே கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிவசங்கரியின் தாய் மல்லிகா உயிரிழந்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சிவசங்கரி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவசங்கரியன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.