கேரளாவின் காசர்கோடு மாவட்டம் முலியாரில் நேற்று மாலை ஒரு பெண்ணும் அவரது நான்கு மாத பெண் குழந்தையும் இறந்து கிடந்தனர். முளியார் அருகே கொப்பளம் கொச்சியை சேர்ந்த பிந்து என்ற 28 வயது பெண் தனது 4 மாத பெண் குழந்தையை கழுத்தை நிறுத்து கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இருந்தாலும் அவரது மற்றொரு மகன் பத்திரமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிந்து தன்னுடைய அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். குடும்ப பிரச்சினை தான் இந்த கொடூர செயலுக்கு காரணம் என்று ஆத்தூர் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.