தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்த வட மாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்தனர்.

இது குறித்து தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையிலான காவல்துறையினர் வட மாநில தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் மார்ச் எட்டாம் தேதி ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வதாக வட மாநில தொழிலாளர்கள் விளக்கம் அளித்தனர். இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.