இன்றைய காலகட்டத்தில் உறவுகளை வளர்த்துக் கொள்ளுதல் என்ற பெயரில் ஏராளமான செயலிகள் இருக்கிறது. இந்த செயலிகள் மூலம் முன்பின் தெரியாத நபர்களுடன் உறவு ஏற்படுவதோடு பின்னாளில் பல விபரீதமான பின் விளைவுகளையும் ஏற்படுகிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள ஐஐடி பாம்பே கல்லூரியில் பயிலும் ஒரு மாணவர் தற்போது காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகாரினை தெரிவித்துள்ளார். அந்த புகாரில் 40 வயது நிரம்பிய ஒரு ஆண் தன்னுடன் இயற்கைக்கு மாறான மாறான உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாகவும், தன்னுடைய கை கால்களை கட்டி போட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடுமைப் படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

அதோடு அந்த ஆணின் மனைவியும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். தாந்திரீக முறையில் உடலுறவு கொள்கிறேன் என்ற பெயரில் தன்னுடைய கழுத்தை நெரித்து உயிரே போகும் அளவிற்கு கொடுமை செய்ததாகவும் மாணவர் கூறியுள்ளார். மாணவரை பாலியல் வன்புணர்வு செய்த கணவன்-மனைவி இருவரும் உயர்கல்வி படித்து நல்ல வேலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.