தமிழக சட்டப்பேரவையில், இன்று முக்கொம்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக இபிஎஸ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இந்நிலையில், முக்கொம்பு விவகாரம் குறித்து முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். அதன்படி, “முக்கொம்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர், 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.