விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளானர். தற்போது ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது. இதிலிருந்து அனன்யா, பவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, பிரதிப், ஐஷு, கானா பாலா என 9 பேர் வெளியேறி இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது ஐம்பதாவது நாளை கடந்து செல்லும் பிக்பாஸில் யாரும் எதிர்ப்பாராத திருப்பமாக  போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்று நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

டாஸ்க்கில் தோற்றால் பிக் பாஸ் வீட்டில் இருந்து உப்பு சர்க்கரை எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் சர்க்கரையை திருடி வைத்துள்ளனர். இதனை கையும் களவுமாக பிக் பாஸ் வீட்டின் தலைவர் தினேஷ் எடுத்துள்ளார். மேலும் இந்த திருட்டு மற்றவர்களின் பெயரை வைத்தும் திருடியது தான் மோசமான சம்பவமாக உள்ளது.