விஜய் தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலமாக அறிமுகமானவர் ரச்சிதா. அதன் பிறகு இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த ஒரு வருடங்களாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக காணப்படுகிறது. தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரச்சிதாவின் கணவர் தினேஷ் கலந்து கொண்டு விளையாடி வருகிறார் . இவருடைய விளையாட்டு நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் நிலையில் பிக் பாஸ் பைனல் வரை கண்டிப்பாக வருவார் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் தினேஷின் பெற்றோர் தன்னுடைய மருமகள் ரச்சிதா குறித்து தற்போது பேட்டி கொடுத்துள்ளனர். அதில் ரச்சிதாவை எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது .அவர் எங்கள் அனைவரும் மீதும் அளவற்ற பாசம் வைத்திருந்தார். அவள் என் மீது வைத்திருந்த பாசத்தை பார்த்து சிலர் பொறாமை பட்டுள்ளனர். என்னை அம்மா அம்மா என்று அன்பாக பார்த்துக் கொள்வார். எனக்கு பெண் குழந்தைகள் இல்லாததால் நானும் அவரை ஒரு மகளாகத்தான் பார்த்தேன் என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

தினேஷ் தாய் இவர்களுடைய பிரிவின் காரணம் குறித்து பேசுகையில், எந்த ஒரு பிரச்சனையும் இருந்தாலும் ரச்சிதா இவ்வளவு நாள் எங்களை விட்டு பிரிந்திருக்க மாட்டார். ஆனால் இவ்வளவு நாள் ஏன் இப்படி இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. அவளைப் பற்றி எந்த ஒரு தவறான தகவல் வந்தாலும் கண்டிப்பாக நாங்கள் அதை நம்ப மாட்டோம். அவளுக்காக காத்திருப்போம் என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.