பிக் பாஸ்-7 வீட்டிற்குள் விதிமுறை மீறல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முன்னதாக எந்த ஒரு சீசனில் இது போன்ற விதிமுறை நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் மாயா மற்றும் பூர்ணிமா விதிமுறை விதிமீறல்கள் செய்தாலும் விசித்ரா மற்றும் அர்ச்சனா விதியை மீறியது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. கமலஹாசனும் விதிமுறை மீறுதல் குறித்து தொடர்ந்து கண்டித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று விக்ரம் மற்றும் பூர்ணிமா இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி உள்ளனர். அதில் கடந்த வாரம் தன்னை கமலஹாசன் வளைத்து வளைத்து கேள்வி கேட்டது குறித்து கோபத்தோடு பேசினார் பூர்ணிமா. இதில் கமலை குறிப்பிட்டு குடிகார அங்கிள் என்று கூறியுள்ளார் பூர்ணிமா. இதை கவனித்த ரசிகர்கள் அந்த வீடியோவை மட்டும் கட் செய்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.