நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இபாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளதோடு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளார். அதன்படி மே 7-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சோதனை முறையில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படும். அதன் பிறகு இன்று மாலை முதல் இ பாஸ் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் வழங்கப்படுவதோடு, ஒரு வாகனத்திற்கு ஒரு இபாஸ் மட்டுமே போதுமானது. இதனையடுத்து உள்நாட்டை சேர்ந்தவர்கள் தங்களுடைய தொலைபேசி நம்பரை பதிவு செய்தும், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தும் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். மேலும் அரசு பேருந்தில் நீலகிரிக்கு வருபவர்களுக்கும், உள்ளூர் வாகனங்களுக்கும் இ-பாஸ் அவசியமில்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.