காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளார். பூஞ்ச் பகுதியில் விமானப்படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். இதில், 5 விமானப்படை வீரர்கள் படுகாய மடைந்தனர். உடனடியாக அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்