தமிழகத்தில் கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  அக்கினி நட்சத்திரம் முடிவடைந்தாலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று சென்னையில் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலை 107.78 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதவிட அதிகமாக மீனம்பாக்கத்தில் 42.6 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியுள்ளது.

இதனால் மதிய நேரத்தில் வெளியில் தேவையில்லாமல் நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தண்ணீர் அதிகமாக குடித்து வெயிலுக்கு தகுந்த உணவை உண்டு உடலை காக்க வேண்டியது அவசியம்.