மதுபோதையில் மணமகன் தன் நெற்றிக்கு பதில் முகம் முழுவதிலும் குங்குமத்தை பூசியதால் மணப்பெண் தன்னுடைய திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மணமகன் முகத்தில் குங்குமத்தை பூசுகையில் மணபெண் தடுத்திருக்கிறார். அப்போது மணமகன் அவரை அடித்துவிட்டார்.

அதனை தொடர்ந்து காவல்துறையின் தலையீட்டின் பேரில் பிரச்சனை முடிவுக்கு வந்தது. இச்சம்பவமானது கடந்த மே 4 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் சகர்கட்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரேங்கேறியுள்ளது. திருமண ஊர்வலம் அஹிராவுரா போலீஸ் நிலையத்தின் மாணிக்பூர் கிராமத்திலிருந்து மிர்சாபூர் வரை ஆடம்பரமாக நடைபெற்றுள்ளது.