நொய்டாவில் உள்ள பிஸ்ரக்ஹ்  பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 12 வயது சிறுவன் ஒருவன் 18 ஆவது மாடியின் பால்கனியில்  இருந்து கீழே தரைத்தளத்தில் நின்று கொண்டிருந்த தனது தாயை அழைத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சிறுவனின் தந்தையும் வேலை நிமித்தமாக வெளியில் சென்றுவிட்டார்.

இந்நிலையில் பால்கனியில் தனியாக நின்று கீழே எட்டிப் பார்த்து தாயை அழைத்துக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து பலத்த காயமடைந்தான். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.