சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளரான ரவீந்தர் 2 பேரும் திருப்பதியில் திருமணம் செய்து புகைப்படம் வெளியிட்டனர். இதையடுத்து அவர்கள் எந்த பதிவு போட்டாலும் சமூகவலைதளங்களில் மிகவும் டிரெண்ட் ஆனார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் ரூ.15 லட்சத்தை ஏமாற்றியதாக அமெரிக்காவில் இருக்கும் விஜய் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.

ரூ. 15 லட்சத்தை வாங்கி விட்டு தயாரிப்பாளர் ஏமாற்றி வருகிறார் என்று விஜய் புகார் கொடுக்க, அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதற்கு ரவீந்தர், அவரிடம் ரூபாய்.15 லட்சம் வாங்கியது உண்மைதான். எனினும் அவர் வெளிநாட்டில் இருந்து  கொண்டுவர முடியாமல் தன்னிடம் கொடுத்ததாகவும், அவரது உறவினர் யாராவது வந்து கேட்டால் கொடுத்துவிடுவேன் என்றும் கூலாக கூறியிருக்கிறார் ரவீந்தர்.