ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஹரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கானா பாடகரான ஹரி, தவமாய் தவமிருந்து சீரியல் வாயிலாக நடிகராக அறிமுகமானார். பின் காற்றுக்கென்ன வேலி சீரியல் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில் ஹரி நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருடைய மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு சீரியல் நடிகர் ஹரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.