தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளது. இந்த தொகையை பெற 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் மற்றும் கலை அறிவியல் போன்ற உயர் கல்வி படிப்புகளில் சேர வேண்டும். இதனைத் தொடர்ந்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தகம் மற்றும் பொது அறிவு நூல்கள் போன்றவை வாங்க தமிழக அரசு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும்.