தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை குறிப்பிட்டு பேசிய அவர், ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்றால் பொதுமக்கள் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழகத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியும் மாமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சித்துள்ளார்.