சமீப காலமாக புதுவிதமான மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது. அதிகாரப்பூர்வ மின்சார துறையில் இருந்து பேசுவதாக சொல்லி மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை என்றும், அவ்வாறு செலுத்தாமல் போனால் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்படும் என்பது போன்ற போலியான மெசேஜ்களை மோசடிக்காரர்கள் நுகர்வோர்களுக்கு அனுப்பி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்சாரத் துறையிலிருந்து வந்ததாக சொல்லி வரக்கூடிய டெக்ஸ்ட் மெசேஜ்களில் இருக்கக்கூடிய லிங்ஸ்களை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். உங்களது சாஃப்ட்வேர் மற்றும் அப்ளிகேஷன்களை வழக்கமான முறையில் அப்டேட் செய்து கொள்ளுங்கள்.