மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற 3ஆம் தேதி தங்க பல்லக்கில் ஆலயத்தை விட்டு மதுரைக்கு புறப்படும் கள்ளழகர் மே 5ஆம் தேதி தங்க குதிரையில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார்.

பின்பு வண்டியூர் பகுதியில் உள்ள தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனம், கெருட வாகனத்தில் காட்சி தருவார். இந்த திருவிழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனை முன்னிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை ஒருநாள் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 5ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை (மே 4ஆம் தேதி) மதுரையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட உள்ளது.