தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக கல்லூரிகளில் பயிலும் மாணவர் மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைக்க விஞ்ஞான ரீதியான பயிற்சி, தங்கும் இடம் மற்றும் சத்தான உணவு உடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் இன்று நடத்தப்படவுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும்  தேர்வுப்போட்டிகள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.