‘ஒரே நாடு. ஒரே ரேஷன்’ திட்டம் தமிழ்நாட்டில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.1,000 மகளிர் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜூலை 20ம் தேதி முதல் வழங்கப்படவிருக்கிறது.   செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக  டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது.

இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திட்டம் குறித்த தகவல்கள் வெளியாக தொடங்கியது. இந்நிலையில்  விண்ணப்ப பதிவின் போது, விரல் ரேகையை பதிவு செய்ய கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளதால் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது கூறப்படுகிறது.