இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பொருள்களுக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் செடி புட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மட்டி வாழைப்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 58 புவிசார் குறியீடு பொருளுடன் இந்தியாவிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.