எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் இன்று அதிகாலை இலங்கை கடற்படையாள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் இரண்டு விசை படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருப்பது ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட ஒன்பது மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை கடற்படையாள் தமிழ்நாட்டை மீனவர்கள் இதுவரை 800 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.