சென்னை சோளிங்கநல்லூரில் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள் பெருவிழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழர்களுக்கு தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாக பிரிக்கப்பட்டு தனி பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளினை மிக சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.

நாம் தமிழர் கட்சி சார்பில் நவம்பர் 1ஆம் தேதி மாலை 4 மணிக்கு சோளிங்கநல்லூர் கிழக்கு கடற்கரை இணைப்பு சாலை அருகே தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பெருவிழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பெருந்திரளாக கலந்து கொள்ள அழைக்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.