அரசு முறை பயணமாக சென்னை வந்துள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்மொழி இன்று நேரில் சந்திக்க உள்ளார். துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை அமைப்பது, சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநரின் நடவடிக்கை தமிழக அரசை எரிச்சல் அடைய செய்துள்ளது. இந்த நிலையில் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து அமைச்சர் பொன்முடி புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.