சென்னை திருவொற்றியூரில் திமுக பிரமுகரின் மகனை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக வட்ட பிரதிநிதி விவேகானந்தர் என்பவரின் மகன் காமராஜ். 35 வயதாகும் இவர் நேற்று அலுவலகத்தில் தனியாக இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதனால் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து காமராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து உடனே சம்பவி இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.