கடந்த 2012-ம் வருடம் வெளியாகிய “அட்டகத்தி” திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் தான் பா.இரஞ்சித். இதையடுத்து கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி மற்றும் காலா ஆகிய படங்களை இயக்கி இருந்தார். இதற்கிடையில் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக பா.இரஞ்சித், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி ஆகிய படங்களை தயாரித்து இருந்தார்.

இந்நிலையில் பா.இரஞ்சித் மலக்குழி மரணங்கள் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது “தொடரும் மலக்குழி மரணங்கள். தமிழ்நாட்டில் சென்ற 3 வாரங்களில் மட்டும் 9 உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம். இந்த கொடூர சமூக அவலத்தை தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கடும் கண்டனங்கள். மலக்குழி மரணங்களை குறிப்பிட்ட சமூகமக்களின் பிரச்சனையாக மட்டும் கருதி கடந்து போகாமல், ஒட்டுமொத்த மனித சமூகத்தின் அவலமாக நினைத்து சட்டங்களை இன்னும் கடுமையாக்கி உடனே தடுத்திட முனைவோம். தமிழ்நாடு அரசே மலக்குழி மரணங்களை உடனடியாக தடுத்திடு” என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.