தமிழில் தாம்தூம் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான கங்கனா ரணாவத் தலைவி படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியில் முன்னணி நாயகியாக வலம் வரும் இவர் அரசியல், சமூக கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். தற்போது கங்கனா ரணாவத் அளித்த பேட்டியில் “அரசியல், சினிமா, சமூகப்பிரச்சினை எதுவாக இருந்தாலும் உடனடியாக நான் கண்டனம் தெரிவிக்கிறேன். இதனால் சில அரசியல் தலைவர்கள் நான் விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு இன்றி செய்துவிட்டனர்.

மேலும் அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்ததாலும் நாட்டிற்கு எதிரான சக்திகளை எதிர்த்து குரல் கொடுத்ததாலும் சுமார் 30 விளம்பரங்களில் நடிக்க நான் ஒப்பந்தமாகி இருந்த நிலையிலும் இரவோடு இரவாக அவற்றை ரத்து செய்து விட்டனர். இதன் வாயிலாக ஒரு வருடத்திற்கு ரூ.30 முதல் ரூ.40 கோடி வருவாய் இழந்து விட்டேன். எனினும் தற்போது சுதந்திரமாக உள்ளேன். நான் சொல்ல நினைப்பதை யாராலும் தடுக்க இயலாது” என்று அவர் கூறினார்.