தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காகவும் அரசு அடிக்கடி புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் நாளை முதல் அதாவது மே 3 ஆம் தேதி முதல் கேழ்வரகு திட்டம் தொடங்கப்படும் என்று உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதில் முதல் கட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கேழ்வரகு வழங்கப்பட இருக்கிறது. இது படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.