குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் நியாயவிலை கடைக்கு வருவதை தவிர்க்க டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் நேரத்தில் ரேஷன் கடைக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. பொங்கலையொட்டி மக்களுக்கு 1.77 கோடி இலவச வேட்டிகள், 1.77 கோடி சேலைகள் வழங்கப்படவுள்ளன. இதனால், கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது