தமிழகத்தில் அரசு மருத்துவத்துறை பணியிடங்களில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் அரசு மருத்துவத் துறையில் உள்ள காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்களில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என பிற ஊழியர்கள் அனைவருக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு 5% மதிப்பெண் வழங்கப்பட்ட அதன் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.