தமிழகத்தில் பூண்டு விலை கிலோ 540 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே உயர்ந்து வரும் பூண்டின் விலை தற்போது வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது. ஆனாலும் வரத்து குறைவாகவே இருப்பதால் விலை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூண்டு மொத்த சந்தையில் கிலோ 450 ரூபாய் வரை விற்பனையாகிறது.. இதனால் வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதியும் அதிகரித்துள்ளது.