நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பதை நாங்கள் முடிவு செய்வோம். அதிமுக கரைவேட்டி, கொடி பயன்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் அதிக அளவில் உள்ளது. பாஜகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்