தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அமலாக்க அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது விருதுநகரின் கோவிலாங்குளம், தொட்டியான் குளம், திருச்சூழி, அரசன் குளம், மேலக்கன்குளம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் 24 மின் திருட்டுகளை கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து நுகர்வோருக்கு ரூ.19 லட்சத்து 57 ஆயிரத்து 804 இழப்பீடு தொகையாக விதித்தனர். குற்றத்தை ஒப்பு கொண்டவர்கள் சமரச தொகையாக ஒரு லட்சத்து 41 ஆயிரம் வழங்கினர். இதனால் அவர்கள் மீது புகார் பதியவில்லை. இது போன்ற மின் திருட்டு குறித்த தகவல்களை 94430 37508-  என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அமலாக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.