தமிழகத்தில் கடந்த சில நாட்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி வரை சென்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும். இதனால் அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும்போது அசௌகரியம்ஏற்படும் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பகல் நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.