தமிழகத்தில் புத்தகத்தை பார்த்து எழுதும் ஓபன் புக் தேர்வு முறை அமல்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. திருச்சியில் விருது வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர், தமிழகத்தில் பொது தேர்வுகள் போன்று மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.