வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி ஐந்து தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி ஆரணி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பெரும்புதூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார். மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் போட்டியிட போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.