தமிழகத்தில் மொத்தம் 7 அரசு போக்குவரத்து கழகங்கள் இயங்கி வருகின்றன. இதில் எந்தெந்த பேருந்து நிறுத்தத்திற்கு எப்போது பேருந்து வரும் அங்கிருந்து எப்போது புறப்படும் என்பது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்வதற்கு செல்போன் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள மொத்தம் ஏழு போக்குவரத்து கழகங்கள் டெண்டர் விடப்பட்டுள்ளது.

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் விழுப்புரம், திருநெல்வேலி, கும்பகோணம், சேலம், மதுரை மற்றும் கோவை ஆகிய ஏழு போக்குவரத்து கழகங்களில் நிறுத்தத்திற்கு வரும் நேரம், அங்கிருந்து புறப்படும் நேரம் குறித்த விவரங்கள் அனைத்தையும் செல்போன் செயலி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள், பேருந்து வழித்தடங்களில் பேருந்துகளின் வருகை மற்றும் புறப்படும் நேரம் குறித்த தகவல்கள் இந்த செயலியில் வழங்கப்படும்.

அதே சமயம் இந்த டெண்டரில் ஏழு போக்குவரத்து கழகங்களுக்கான வடிவமைப்பு, மேம்பாடு,செயல்படுத்தும் மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் வாகன திட்டமிடல் ஆகிய அம்சங்கள் இருக்கும். இந்த புதிய வசதி 2213 புதிய டீசல் பஸ்கள், 500 மின்சார பேருந்துகளில் செயல்படுத்தப்படும் எனவும் இந்த வசதி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.