மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான கால அவகாசம் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்தும் மின்வாரிய அலுவலகங்களிலும் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் ஒரு மாதம் காலம் சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடைபெற்றது. இதில் நுகர்வோர்கள், கட்டணம் செலுத்திய அன்றே, பெயர் மாற்றம் செய்து பயனடைந்தனர். இந்நிலையில், இந்த சிறப்பு முகாமுக்கான கால அவகாசம் செ.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.